Wednesday, January 11, 2012

விடுதலைப் புலிகளின் அஞ்சல் தலைகளை புறக்கணிக்க இலங்கை முடிவு

விடுதலைப் புலிகளின் அஞ்சல் தலைகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட அஞ்சல் தலைகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

பன்னாட்டு; அஞ்சல் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு அஞ்சல் தலையும் உறுப்பு நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது பன்னாட்டு நாடுகளின் அஞ்சல் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இது தொடர்பான பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment