Tuesday, January 24, 2012

தலைமன்னார் அருகே, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளன. கச்சத்தீவு அருகே, அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,இலங்கை கடற்படைக் கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர், கல், கட்டைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தலைமன்னார் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் நான்கு படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், ஒரு படகு சேதமடைந்ததாகவும் ஒரு மீனவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment